களப்பயணம் ( கஜா புயல்) 19/12/18
கஜா புயல் நெற்களஞ்சியம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை சீற்றம் கஜா புயலாகும். புயலின் காரணமாக டெல்டா மாவட்டமே இயற்கை அழகே இழந்தது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியே செய்ய வேண்டும் என்று பி. சுபத்ரா அம்மா அவர்கள் எங்களிடம் எடுத்துக் கூறினார். அதற்காக கல்லூரி செயலர் அம்மா அவர்கள் எங்களுக்கு உதவும் வகையில் கல்லூரியின் பேருந்தை தயார் செய்து கொடுத்தார். அதில் கல்வியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அரிசி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களைப் பார்த்து என் மனம் மிகவும் கவலையாக இருந்தது.