Posts

பாரதி உலா

Image
பாரதி உலா            பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில் விசுவின் கல்வி அறக்கட்டளை சார்பில் பாரதியின்  சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி என்னும் பெயரில் பாரதி உலா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நம் செயலர் திருமதி. புனிதா கணேசன் அவர்களும் திரைப்பட நகைச்சுவை நடிகரான திரு. டெல்லி கணேசன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.                         இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை உரத்த சிந்தனையின் செயலர் திரு. சேகர் அவர்கள்  வழங்கினார். அதனைத் தொடர்ந்து வாழ்த்துரையை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு. வீராசாமி அவர்கள் வழங்கினார். பிறகு நம் செயலர் அம்மா அவர்களும் திரு. டெல்லி கணேசன் அவர்களும் தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளும் பேச்சு மற்றும் பாட்டு  போட்டிகள்  நடத்தியதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. தஞ்சை தாமு அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழ...

காந்தி ஜெயந்தி

Image
காந்தி ஜெயந்தி விழா         மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு  பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில்  அக்டோபர் 1 அன்று  காந்தி ஜெயந்தி விழா  வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கல்வியல் கல்லூரி முதல்வர் திருமதி.  ப. சுபத்ரா  அவர்கள்  கலந்து கொண்டார்கள்.  கல்வியல் கல்லூரி பேராசிரியரான திரு. தமிழ்செல்வன்  தொகுத்து வழங்கினார்.

ஆசிரியர் தினவிழா

Image
ஆசிரியர் தினம்        டாக்டர். ராதாகிருஷ்ணன்  அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. பணியிடை பயிற்சி சென்றுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழா

Image
சுதந்திர தின விழா            சுதந்திர தின விழா  பணி முன் பயிற்சி சென்றுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தேசப்பற்றுடன் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.       சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல தலைப்புகளில் பேச்சு கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தினம் அன்று பல பரிசுகள் வழங்கப்பட்டன.   இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. சேகர் அவர்கள் கலந்து கொண்டார்.                                                                                முதல் நிகழ்வாக தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள் தேசியக் கொடியினை ஏ...

காமராசர் பிறந்த நாள்

Image
காமராசர் பிறந்த நாள் விழா       பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில் காமராசரின் பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதை நினைவு கூறும் வகையில் எமது கல்வியல் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து    வழங்கினார்கள்.        முதல் நிகழ்வாக வரவேற்புரையை கல்வியல் கல்லூரி பேராசிரியர் திருமதி. ராஜலட்சுமி அவர்கள் சிறப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சியை கல்வியல் கல்லூரி பேராசிரியர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இதனை தொடர்ந்து எமது கல்வியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி காவியா தனது கம்பீர பேச்சால் ஒரு கவிதை ஒன்றை வாசித்தார்.                                                 அடுத்த நிகழ்வாக இரண்டாமாண்டு மாணவ மாணவிகள் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்கள். இறுதியாக நன்றி உரையை இரண்டாம் ஆண்டு மாணவி அவர்கள்...

ஆண்டு விழா.

Image
ஆண்டு விழா      பாரத் கல்வியல் கல்லூரி 16 வது ஆண்டு விழா நடைபெற்றது. நான் இந்த கல்லூரியில் சேர்ந்து முதலாவது ஆண்டு விழா.    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மகேசன் அவர்களும் செயலர் அம்மா அவர்களும் கல்வியல் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.        கல்வியல் கல்லூரி தோழர் மற்றும் ஆசிரியர் பயிற்சி முதல்வர் மாணவர்களும் பணி புரியும் படி ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி தொடங்கியது சிறப்பு விருந்தினர்கள்  கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.          பின்பு நடன நிகழ்ச்சி தொடங்கியது. கல்வியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒரு குழுவாக நடனமாடினார்கள். எனது வகுப்பு மாணவி முதல்வர் ஆணையால் பரமேஸ்வரி மற்றும்  யாழினி யாழ் இருவரும் தனித்தனியாக பாடல்கள் பாடினார்கள். இரண்டாம் ஆண்டு மாணவன்  மணியரசன் கவிதை வாசித்தார்.  ஆண்டு விழா சிறப்பாக நிறைவு பெற்றது. ...

இன்பச் சுற்றுலா.

Image
இன்பச் சுற்றுலா         எங்கள் பாரத் கல்வியல் கல்லூரி முதல்வர்  அம்மா அவர்கள் மற்றும் இருபால்  பேராசிரியர் அனைவரும் இன்பச் சுற்றுலா செல்லலாம் என்று திட்டமிட்டு வந்தனர்.  மூன்று நாள்  மட்டும் செல்லலாம் என்று  முடிவெடுத்தனர். பாரத் கல்வியில் குழு செயலர் அம்மா திருமதி புனிதா கணேசன் அவர்கள் சுற்றுலாவுக்கு அனுமதி   வழங்கியதே தொடர்ந்து  இரண்டு நாட்கள்  ஊட்டி செல்ல திட்டமிட்டனர். இந்த இன்பச் சுற்றுலா வானது கல்வியல் கல்லூரி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம்  ஆண்டு மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவிற்கு ஊட்டி சென்றோம்.   தமிழ்நாட்டில் மிகப்பெரிய மழை சிகரம்  தொட்டபெட்டாஆகும். அங்கு தேயிலையே பயன்படுத்தி தேயிலைத்தூள் கலந்து தேநீர் வழங்கப்பட்டது.  தேனீர் ஆனது மிகவும் சுவையாக இருந்தது. நான் தேயிலை தூள் வீட்டிற்கு வாங்கி வந்தேன்.      இறுதியாக மெழுகுவர்த்தி அருங்காட்சியகம் பேய் வீடு போன்ற இடத்திற்கு சென்றோம். அருங்காட்சியகத்தில் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி நிறைய தலைவர்கள் உ...