Posts

குடியரசு தினம் 26/01/19

Image
குடியரசு தின விழா          69 ஆவது குடியரசு தின விழா நமது பாரத் கல்வியல் கல்லூரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதல் நிகழ்வாக கல்லூரி வளாகத்தில் காலையில்உணவு மேலாண் துறை மாணவர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. பின் அதனை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு  பின் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.         அதன் பிறகு திரு . அறவாழி அவர்கள் உறுதிமொழி கூற அதை மீண்டும் மாணவர்கள் கூறினார்கள். பாரத் கல்லூரி முதல்வர் டாக்டர். வீராசாமிஅவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் கல்வியல் கல்லூரிமுதல்வர் சிறப்புரையாற்றினார். இறுதியாக இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

விளையாட்டு தினம் 22/01/19

Image
விளையாட்டு போட்டி      எனது கல்வியியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் ஆண்களுக்கான  800மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. தில் வெற்றி பெற்ற மாணவர்கள் அருண் கல்வியில் கல்லூரிக்கு சென்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.       இதில் மாநில அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில்  எமதுகல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவன் மணியரசன் இரண்டாம் பரிசையும் பெற்றார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பொங்கல் பண்டிகை...

Image
சமத்துவ பொங்கல் விழா    பொங்கல் திருவிழா எங்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அதில் நம் நாட்டின் பாரம்பரிய மண்பாண்டங்களை வைத்து பொங்கல் வைத்தோம். இதன்  முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து இந்த விழாவினை கொண்டாடினோம். இவ்விழாவில்  எமது கல்வியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்தோம்.          இதில் சிறப்பு விருந்தினராக  எமது கல்லூரி செயலர் அம்மா அவர்கள் பால் பொங்கும் நேரத்தில் குலவை சத்தம் போட்டு பொங்கலை மகிழ்ச்சியாக தொடங்கி வைத்தார். பிறகு பாரத் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மூன்று பிரிவாக பிரிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பொங்கல் விழா நடைபெற்றது.         பின்பு நானும் என் தோழிகளும் இணைந்து கும்மியடித்து மகிழ்ந்தோம். நான் இந்த பொங்கல் விழாவில் முதன்முறையாக மண்பானையில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினேன். மிகவும் மகிழ்ச்சியை தந்தது.  ...

களப்பயணம் ( கஜா புயல்) 19/12/18

Image
கஜா புயல்          நெற்களஞ்சியம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை சீற்றம் கஜா புயலாகும். புயலின் காரணமாக டெல்டா   மாவட்டமே இயற்கை அழகே  இழந்தது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியே செய்ய வேண்டும் என்று பி. சுபத்ரா அம்மா அவர்கள் எங்களிடம் எடுத்துக் கூறினார்.        அதற்காக கல்லூரி செயலர் அம்மா அவர்கள்  எங்களுக்கு உதவும் வகையில் கல்லூரியின்  பேருந்தை தயார் செய்து கொடுத்தார். அதில் கல்வியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட  மக்களின்   மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அரிசி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் வீடுகளை   இழந்து தவிக்கும் மக்களைப் பார்த்து என் மனம் மிகவும்   கவலையாக இருந்தது.

இசை வகுப்பு

Image
இசை வகுப்பு       28. 11. 18 இன்று மாலை 3 மணி அளவில் பாடல் வகுப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் திரு. சங்கர் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைந்தது. பின்னர் மாணவ மாணவிகள் சார்பில் எமது தோழி     நன்றி உரை வழங்கினார். இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

பாரதி உலா

Image
பாரதி உலா        பாரதி உலா பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில் விசுவின் கல்வி அறக்கட்டளை சார்பில் பாரதியின்  சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் புதிய முயற்சி என்னும் பெயரில் பாரதி உலா நடைபெற்றது. இதனை வழிநடத்திச் சென்றவர் இயக்குனர் முத்துராமன் ஆவார். இதன் குறிக்கோள் ஒரு வருடத்திற்கு 15 ஊர்களில்  31 நிகழ்ச்சியை நடத்துவதே ஆகும்.    அந்த வகையில் இந்த ஆண்டு எமது கல்லூரியில் நான்காவது நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் எங்கள் கல்வி குழுமத்தின் செயலர் அம்மா அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக நடிகைகள் பங்கேற்ற எஸ்  பி. முத்துராமன் அவர்களுக்கு  பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.             தஞ்சை  தாமு  அவர்கள் தொகுப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாட்டு ,கவிதை போட்டிகள் நடைபெற்றது. இதில் எம் கல்லூரி மாணவிகள் பாட்டுப்போட்டியில் சேர்ந்து பரிசினைப் பெற்றார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ...

வானொலி நிகழ்ச்சி

Image
வானொலி நிகழ்ச்சி        29.10. 18  இன்று வானொலி நிகழ்ச்சி எங்கள் கல்லூரியில் நடைபெற்றது. இது 11 மணி அளவில் கல்லூரி கலாட்டா என்னும் நேரடி நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்றோம். இந்த நிகழ்ச்சியில் என் தோழி காவியா அன்னை தெரசாவின் சிந்தனையை கூறினாள்.  நான் ஒரு கவிதை ஒன்றே கூறினேன். பல்வேறு மாணவ மாணவிகள் நேரடியாக பங்கேற்றனர். கல்லூரி கலாட்டா என்னும் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சியாக பங்கேற்றோம்.