Posts

புனித அந்தோனியார் நடுநிலை பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்           புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி    மானம்புச்சாவடி அமைந்துள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அமைந்துள்ளது. விடுதி வசதியும் உள்ளது. இங்கு பயிலும் சில மாணவர் மாணவிகளுக்கு தாய் தந்தையற்ற அனாதை குழந்தைகள். அவர்கள் அரசு உதவியுடன் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி அரசு உரிமை பெற்ற பள்ளியாகும்.    அங்குள்ள பெண் பாதிரியார்கள் எங்களுடன் அன்பாக பழகினார். இரண்டு நாட்கள் ஆங்கில வகுப்பு நடக்கும்போது உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஸ்பாடிக்ஸ் மேல்நிலை பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்         இன்று இந்த பள்ளிக்கு வந்தோம். இங்கு மழலையர் முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியின் முதல்வர் கீழே உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இரண்டு நாட்கள் இப்பள்ளிக்கு உற்றுநோக்கல்  பயிற்சிக்காக வந்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தகுந்த மரியாதையுடன் எங்களை வரவேற்றனர்.         தனியறை கொடுக்கப்பட்டது. இங்கு உள்ள குழந்தைகளும் ஆசிரியர்களும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர்.   இங்கு காலையில் நடைபெறும் இறைவழிபாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அதில் எங்களுக்காகவும் வேண்டிக்கொண்டனர். இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புது புது தகவல்களை அறிந்துகொண்டேன்.

ராஜா அரசினர் மேல்நிலைப்பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்                           ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சிக்காக சென்றோம்.  நாங்கள் எட்டுப்பேர் ஒரு குழுவாக சென்றோம். ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. தலைமையாசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் அவர்கள் எங்களுக்கான உற்றுநோக்கல் பயிற்சி  எடுப்பதற்கு அனுமதி அளித்தனர். தகுந்த மரியாதையுடன் நடத்தினார். நான் ஆங்கில வகுப்பு நடக்கும் போது சென்றேன். உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். அரசு பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர் எவ்வாறு இருப்பர் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் பலவகையான மாணவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். நான் வகுப்பு எடுத்தேன். மேலும் வகுப்பை கண்காணிப்பதற்கும் சென்றேன்.          

குடியரசு தினம் 26/01/19

Image
குடியரசு தின விழா          69 ஆவது குடியரசு தின விழா நமது பாரத் கல்வியல் கல்லூரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதல் நிகழ்வாக கல்லூரி வளாகத்தில் காலையில்உணவு மேலாண் துறை மாணவர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. பின் அதனை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு  பின் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.         அதன் பிறகு திரு . அறவாழி அவர்கள் உறுதிமொழி கூற அதை மீண்டும் மாணவர்கள் கூறினார்கள். பாரத் கல்லூரி முதல்வர் டாக்டர். வீராசாமிஅவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் கல்வியல் கல்லூரிமுதல்வர் சிறப்புரையாற்றினார். இறுதியாக இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

விளையாட்டு தினம் 22/01/19

Image
விளையாட்டு போட்டி      எனது கல்வியியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் ஆண்களுக்கான  800மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. தில் வெற்றி பெற்ற மாணவர்கள் அருண் கல்வியில் கல்லூரிக்கு சென்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.       இதில் மாநில அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில்  எமதுகல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவன் மணியரசன் இரண்டாம் பரிசையும் பெற்றார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பொங்கல் பண்டிகை...

Image
சமத்துவ பொங்கல் விழா    பொங்கல் திருவிழா எங்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அதில் நம் நாட்டின் பாரம்பரிய மண்பாண்டங்களை வைத்து பொங்கல் வைத்தோம். இதன்  முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து இந்த விழாவினை கொண்டாடினோம். இவ்விழாவில்  எமது கல்வியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்தோம்.          இதில் சிறப்பு விருந்தினராக  எமது கல்லூரி செயலர் அம்மா அவர்கள் பால் பொங்கும் நேரத்தில் குலவை சத்தம் போட்டு பொங்கலை மகிழ்ச்சியாக தொடங்கி வைத்தார். பிறகு பாரத் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மூன்று பிரிவாக பிரிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பொங்கல் விழா நடைபெற்றது.         பின்பு நானும் என் தோழிகளும் இணைந்து கும்மியடித்து மகிழ்ந்தோம். நான் இந்த பொங்கல் விழாவில் முதன்முறையாக மண்பானையில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினேன். மிகவும் மகிழ்ச்சியை தந்தது.  ...

களப்பயணம் ( கஜா புயல்) 19/12/18

Image
கஜா புயல்          நெற்களஞ்சியம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை சீற்றம் கஜா புயலாகும். புயலின் காரணமாக டெல்டா   மாவட்டமே இயற்கை அழகே  இழந்தது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியே செய்ய வேண்டும் என்று பி. சுபத்ரா அம்மா அவர்கள் எங்களிடம் எடுத்துக் கூறினார்.        அதற்காக கல்லூரி செயலர் அம்மா அவர்கள்  எங்களுக்கு உதவும் வகையில் கல்லூரியின்  பேருந்தை தயார் செய்து கொடுத்தார். அதில் கல்வியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட  மக்களின்   மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அரிசி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் வீடுகளை   இழந்து தவிக்கும் மக்களைப் பார்த்து என் மனம் மிகவும்   கவலையாக இருந்தது.