Posts

தையல் கலை.

Image
தையல்   வகுப்பு             பாரத் கல்வியல் கல்லூரியில் உள்ள தையல்  வகுப்பிற்கு மாணவ-மாணவிகளே அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டு வகையான தையல் எந்திரங்கள் அதிகமிருந்தன. ஒவ்வொரு இயந்திரத்திலும் மாணவர்கள் அமர்ந்திருந்தன.            தையல் ஆசிரியர் தையல் இயந்திரத்தை எவ்வாறு இயக்க வேண்டும் என  கற்றுக் கொடுத்தார். தையல் இயந்திரத்தின் வரலாறு மற்றும் அதன் பாகங்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தையல் இயந்திரத்தின் பயன்பாடுகளை மாணவர்களுக்கு விளக்கினார்.         பாரத் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுபத்ரா அவர்கள் தையல்  தொழிலின் முக்கியத்துவத்தையும் அத்தொழில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதையும் விளக்கினார்.

கல்வி சுற்றுலா.

Image
கல்விச் சுற்றுலா        பாரத் கல்வியல் கல்லூரியில் கல்வி சுற்றுலாவிற்காக தஞ்சாவூரில் அமைந்துள்ள அரண்மனைக்கு கல்லூரி வாகனத்தில் 11 மணி அளவில் சென்றோம். அரண்மனைக்குச் செல்ல நுழைவு சீட்டு ரூபாய் 50 அளித்து அரண்மனையே சுற்றி பார்க்க தொடங்கினோம் முதலில் சரஸ்வதி  மகாலில் பழமை வாய்ந்த புத்தகங்கள் இருந்தன. முந்திய  ஆசிய வரைபடங்கள் கண்டு மேலும் போர் ஆயுதங்களை கண்டு மகிழ்ந்தோம்.              பின்பு தஞ்சாவூரின் வரலாற்றை மிக விரைவாகவும் விரிவாகவும்  சரஸ்வதி மகால் அரண்மனை வரைபடம் கும்பகோணம் புகழ்பெற்ற கோவில்கள் மண் பாண்டங்கள் செய்வது குத்து விளக்கு தயாரிப்பது தஞ்சையில் புகழ்பெற்ற தலையாட்டி  பொம்மை தஞ்சாவூர் தட்டு இவையெல்லாம் திரையில் பார்த்து மகிழ்ந்தோம்.               இதற்கு அடுத்து நடராஜர் சிலை பார்வதி சிலை ராஜராஜ சோழனின் சிலை அவர் பயன்படுத்திய ஆடை அணிகலன்கள் பழங்கால நாணயங்கள் ஆயுதங்கள் பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் இவையெல்லாம் கண்டு மகிழ்ந்தோம். ...

கைவினைப் பொருட்கள்

Image
கைவினைப் பொருட்கள் கண்காட்சி        பாரத் கலை மற்றும் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் கைவினைப் பொருட்கள் ஏற்படுத்தினார்கள். அதில் எங்களுக்கும் ஒரு வாய்ப்பளித்தனர். கல்வியல் கல்லூரி முதல்வர் அம்மா  டாக்டர் சுபத்ரா அவர்கள் எங்களையும் அதில் கலந்து கொள்ள  அனுமதி தந்தார்கள்.               கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்த்து மகிழ்ந்து வந்தோம். அதையொட்டி நான் செயின் வாங்கினேன். எனது தோழி தோடு வாங்கினாள் இதேபோல் எங்கள் மாணவிகள் எல்லோரும்  ஒவ்வொரு பொருட்கள் வாங்கி கைவினைப் பொருட்களை   வாங்கி மகிழ்ந்தோம். அங்கு வந்திருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு ஊரில் இருந்து வந்தவர்கள். நாமக்கல் வேளாங்கண்ணி கடலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து கைவினைப் பொருட்களை கொண்டு வந்தார்கள். அதை நாங்கள் வாங்கி மகிழ்ந்தோம்.

மகளிர் தின விழா..

Image
மகளிர் தினம்                                              எமது பாரத்  கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு  பாரத் கல்வி   குழுமத்தின் செயலர் அம்மா அவர்கள் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினோம். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கவிஞர் " மனுஷி"  அவர்கள் கலந்துகொண்டு பெண்களைப் பற்றிய சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. என் கல்லூரி  மாணவிகள் நடன போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசினைப்  பெற்றார்கள்.               இதனை தொடர்ந்து  பல்வேறு கலை நிகழ்ச்சி  பரிசளித்த லும் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை எமது பாரத் கல்லூரியில் அனைத்து பேராசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுடன் கொண்டாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. ...

புனித அந்தோனியார் நடுநிலை பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்           புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி    மானம்புச்சாவடி அமைந்துள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அமைந்துள்ளது. விடுதி வசதியும் உள்ளது. இங்கு பயிலும் சில மாணவர் மாணவிகளுக்கு தாய் தந்தையற்ற அனாதை குழந்தைகள். அவர்கள் அரசு உதவியுடன் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி அரசு உரிமை பெற்ற பள்ளியாகும்.    அங்குள்ள பெண் பாதிரியார்கள் எங்களுடன் அன்பாக பழகினார். இரண்டு நாட்கள் ஆங்கில வகுப்பு நடக்கும்போது உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஸ்பாடிக்ஸ் மேல்நிலை பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்         இன்று இந்த பள்ளிக்கு வந்தோம். இங்கு மழலையர் முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியின் முதல்வர் கீழே உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இரண்டு நாட்கள் இப்பள்ளிக்கு உற்றுநோக்கல்  பயிற்சிக்காக வந்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தகுந்த மரியாதையுடன் எங்களை வரவேற்றனர்.         தனியறை கொடுக்கப்பட்டது. இங்கு உள்ள குழந்தைகளும் ஆசிரியர்களும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர்.   இங்கு காலையில் நடைபெறும் இறைவழிபாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அதில் எங்களுக்காகவும் வேண்டிக்கொண்டனர். இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புது புது தகவல்களை அறிந்துகொண்டேன்.

ராஜா அரசினர் மேல்நிலைப்பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்                           ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சிக்காக சென்றோம்.  நாங்கள் எட்டுப்பேர் ஒரு குழுவாக சென்றோம். ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. தலைமையாசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் அவர்கள் எங்களுக்கான உற்றுநோக்கல் பயிற்சி  எடுப்பதற்கு அனுமதி அளித்தனர். தகுந்த மரியாதையுடன் நடத்தினார். நான் ஆங்கில வகுப்பு நடக்கும் போது சென்றேன். உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். அரசு பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர் எவ்வாறு இருப்பர் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் பலவகையான மாணவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். நான் வகுப்பு எடுத்தேன். மேலும் வகுப்பை கண்காணிப்பதற்கும் சென்றேன்.